Monday 1 February 2016

"விலையில்லா" ரோபோ

ஏகா சாரின் திருவிளையாடல்கள் அதிகம் பேரால் படிக்கப்படுகிறது என C.B.I வட்டாரத்தில் இருந்து தகவல் வந்ததால், அன்னாரின் அடுத்த திருவிளையாடல் இதோ: 

சாரைபற்றி தெரியாதவர்கள் "தல"ய  இங்கே சென்று சந்தித்து வாருங்கள்.

சாரை மீட் பண்ணியவர்கள் தொடருங்கள்.

தொடர் விடுமுறைக்குப்பின், வந்த  ஏகாவின் முகத்தில் எதையோ பறி கொடுத்த சோகம் இழையோடியது. 

மெல்ல பேச்சு கொடுத்தேன்,

என்ன சார் ஊர்ல எல்லாம் நல்லா இருக்காங்களா, விவசாயம் எப்படி போய்கிட்டு இருக்கு.  (தல ஊருக்கு செல்லும்பொழுது எல்லாம் அனைவரிடமும், உளுந்து விதைச்சிருக்கேன், வாழை போட்டு இருக்கேன் உங்களுக்கு எவ்வளவு வேணும்ன்னு சொல்லுங்க கொண்டு வரேன் என சொல்லுவார் (சொல்லுவதோடு சரி))

அட போங்க சார், சிவில் லைப்ல ஒண்ணுமே சரி இல்லை எல்லாரும் ஏமாத்துறாங்க.

மனசு நோகுற அளவுக்கு அப்படி என்னதான் நடந்துச்சு, சொல்லுங்க சார் சொல்லுங்க.

இங்கே இருந்து (காலேஜ் இருக்கும் ஊர்) பஸ் ஸ்டான்ட் போறதுக்கு  பஸ்ல காசு கேக்குறான் சார்... சரி தொலஞ்சு போகுதுன்னு டிக்கெட் எடுத்துட்டு ஊருக்குப்போனா காட்டுல (விவசாய நிலத்தில்) வேல பாக்குற பயபுள்ளக வேல செஞ்சதுக்கு கூலி கேக்குறானுங்க.

 என்ன அநியாயம் வேல செஞ்சதுக்கு கூலி கேக்கலாமா, நம்மள மாதிரி  "இலவச சேவை" செய்ய முடியாதா?

சார் உங்களுக்கே தெரியும், நீங்கள் எல்லாம் முழிக்கும் முன்னால நான் எழுந்து போனா, எல்லாஒரும் தூங்கின பின்னாலதான் வருவேன்.(சார் ஹாஸ்டல் கம் மெஸ் இன்சார்ஜ்) நாட்டுக்காகஉழைச்சேன், இப்போ வீட்டுக்காக உழைக்கிறேன்ஆனா.....

இந்த கூலிபசங்க எல்லாத்தையும் காலி பண்ணிடுவாங்க போலிருக்கு, இப்படி இருந்தா எப்படி சார் விவசாயம் பண்ண முடியும் என அலுத்துக்கொண்டார்.

இப்படி காட்டு வேலை செய்றவங்க எல்லாம் கூலி கேட்டா விவசாயம் விளங்கிடும், பேசாம ரெண்டு ரோபோ வாங்கிப்போடுங்க சார் என்றேன்.


தல அசராம ஒரு கேள்வி கேட்டார்...

ப்ரீயா கொடுப்பாங்களா சார்.

4 comments:

  1. இதுவும் ஃப்ரீதான் வேண்டுமா ? ஹாஹாஹா

    ReplyDelete
    Replies
    1. ஏகா சார் இதைத்தான் எதிர்பார்க்கிறார், நன்றி நண்பரே.

      Delete
  2. நல்லா இருக்கும்,,,

    ReplyDelete
  3. ஆனா ஏகா சார்ஜ் போட கரண்ட்டும் ப்ரீயா கேப்பாரே...
    நன்றி.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...