Showing posts with label பயணம். Show all posts
Showing posts with label பயணம். Show all posts

Sunday, 24 January 2016

வனத்திருப்பதி

தென் தமிழகத்தில் அமைந்துள்ளது வனத்திருப்பதி.
இங்கு குடி கொண்டுள்ள இறைவன் ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள்.

பொங்கல் விடுமுறையில் இங்கு சென்று வரும் வாய்ப்பு அமைந்தது.

காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நடை திறந்து இருக்கும், நாங்கள் சென்றது சனிக்கிழமை. இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த இலவச இட வசதி உள்ளது.



துரித தரிசனம் வேண்டும் எனில் கட்டணம் 50 ரூபாய்.

தரிசனம் முடிந்தவுடன் தீர்த்தம், துளசி மற்றும் பிரசாதம் வழங்கப்படுகிறது.

இந்த நடைமுறை அனுதினமும் உள்ளதாம், புரட்டாசி சனிக்கிழமைகளில் வரும் பக்தர்கள் அனைவருக்கும் காலை முதல் (மதியம் வரை இருக்கலாம்) அன்னதானம் வழங்கப்படுகிறது
தரிசனம் முடித்தவுடன் இதற்கான டோக்கன் வழங்கப்படுகிறது.


எங்கு உள்ளது:
புன்னை நகர், திருச்செந்தூர் வட்டம்.

எப்படி செல்வது:
ட்ரெயினில் சென்றால் "கச்சனா விளை" நிலையத்தில் இறங்கி கொண்டால், கோவில் நடக்கும் தூரம்தான்.
செல்லும் வழியில் படம் "பிடித்த" காட்சி

 சாலை மார்க்கமாக சென்றால்  திருச்செந்தூரில் இருந்து குரும்பூர் வழியாக செல்லலாம் (நாசரேத் செல்லும் வழி), தூத்துக்குடி வழியாக சென்றாலும் குரும்பூர் வழியாக செல்லலாம்.

திருச்செந்தூரில் இருந்து 20km தொலைவு, தூத்துக்குடியில் இருந்து 45km தொலைவு.

எங்கு தங்குவது:
திருச்செந்தூர், தூத்துக்குடியில் தங்கலாம். (புன்னை நகரிலும் தங்கும் விடுதி உள்ளது)

விருப்பமுள்ளவர்கள் சென்று வாருங்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...