கரகத்தை பாக்க வந்த மகாஜனங்களே, நீங்க எதிர்பாத்து வந்தது நம்ம ஆட்டத்துல இருக்குமுங்க
(நான் நகைச்சுவையை சொன்னேன்) பாத்து போட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க.
----------------------------------------------------------------------------------------------------------------------
இந்த
சம்பவம் நடந்து இருபது வருஷம் இருக்கும். அப்போ எல்லாம் வீட்டுல கலர் டிவி
இருந்தாலே அந்த வீட்டை "அம்பானி" மாளிகை ரேஞ்சுக்கு பாக்குற காலம்.
கல்யாணம்
காட்சி நடந்தால் அம்பானி வீடுகள்ல "வீடியோ டெக்" வைத்து விடியுற வரைக்கும்
சினிமா ஓட்டுவாங்க இது இலவசமுங்க, அந்த தெருவுல உள்ள மக்கள் எல்லாம் ஆஜர்.
இப்ப
நெட்ல படம் "ரிலீஸ்!" ஆகுற மாதிரி எல்லாம் அப்போ இல்ல. நமக்கு பிடிச்ச
பாட்ட எப்படி காட்சி "படுத்தி" இருப்பாங்க என்பதே ஒளியும் ஒலியும்லதான்
பக்க முடியும்.
ஒரு நாள் பக்கத்துக்கு தெருவில் உள்ள வீட்ல திருமணம்,
வழக்கம் போல "டெக்"ல படம் போட ஏற்பாடுகள் நடந்துகிட்டு இருந்திச்சு, ஒரே
ராத்திரியில் இரண்டு (சில நேரம் மூணு) படங்கள் போடுவாங்க. என்ன படங்கள்
இருக்குன்னு தெரிஞ்சுக்க சில "உளவாளிகள்" உளவு பாத்து சொல்வாங்க.
பக்கத்துக்கு
வீடு பாப்பா அப்படி ஒரு உளவாளி மூலம் தகவல் தெரிஞ்சுகிட்டு தெருவெல்லாம்
கேக்குற மாதிரி ஹேய்...இன்னைக்கி "கருவாட்டுக்காரன்" போடுறாங்க டோய்...ன்னு
சத்தமா சொல்லுச்சு.
எங்களுக்கு ஒன்னும் புரியல, பாப்பாகிட்ட கேட்டா கருவாட்டுக்காரன் கொண்டு வந்து இருக்காங்கன்னு அதே பல்லவி பாடுது.