Thursday, 14 January 2016

பொங்கலுக்கு முன் ஒரு நிமிடம் ப்ளீஸ்

நம்ம ஏகா சாருடன் வேலை பார்த்துக்கொண்டிருந்த பொழுது புது விதமான ஆராய்ச்சிகள் பல  நடந்தன.

சாரைப்பற்றி தெரிந்து கொள்ள இங்கே சென்று வாருங்கள்.

தெரிஞ்சுக்கிட்டீங்களா, இப்போ தொடருங்கள்.

அழகான விடுமுறை தினம் அது, நண்பர் குழாம் அனைவரும் "அதிகாலை" 8.30 மணிக்கே எல்டுந்து விட்டோம்.

வழக்கம்போல் ஏகா சார் மிஸ்ஸிங், காலை கடமைகளை முடித்து விட்டு மெஸ்ஸிற்கு சென்றோம்.

அனைவருக்கும் நல்ல பசி,அந்தோ பரிதாபம் மாஸ்டர் மிஸ்ஸிங், .

வந்தார் நமது ஆபத்பாந்தவன், நான் இருக்கும் வரை யாரும் வெறும் வயித்தோட இருக்கப்படாது.

பேப்பர் படிச்சிட்டு வாங்க "அதுக்குள்ள" ப்ரேக்பாஸ்ட் ரெடி பண்ணிடுவேன் என்று சொன்னாரோ இல்லையோ,

இல்லாத போனை அட்டெண்ட் பண்ணி,

இதோ வந்திட்றேன்னு இரண்டு விக்கெட் காலி.

எதையும் தாங்கும் இதயம் கொண்ட நால்வர் அணி மட்டும் பேப்பர் படிக்க ஆரம்பித்தோம்.

வரி விளம்பரத்தைக்கூட "வரி விடாமல்" படித்து முடித்த உடனே ஏகா சார்   வெற்றிப்புன்னைகையுடன் "விருந்துண்ண" அழைத்தார்.

 "வஸ்துவை" உள்ளே தள்ளிய பின்பு ஆவலாய் ஏகா சார் எப்படி இருக்கு என்றார்.

அல்வா சூப்பர் என்றோம் அனைவரும் கோரசாய்.

போங்க சார் இது பொங்கல் என்றார்.





போங்கள் (பிழையாக எழுதவில்லை அந்த பொங்கல், "போங்கல்" ஆகத்தான் இருந்தது) சூப்பர் ஏகா சார் என்று சொல்ல யாருக்கும் வாயை திறக்க முடியவில்லை.

(ஏகா சாருக்கும்) அனைவருக்கும் இனிய பொ(போ)ங்கல்  வாழ்த்துக்கள்.





5 comments:

  1. ஹா... ஹா...

    இனிய பொங்கல் தின நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பரே.

      Delete
  2. ஸூப்பர் கடி நண்பரே பொங்கல் நல்வாழ்த்துகள் நண்பரே

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜி , இனிய உழவர் தின வாழ்த்துக்கள்.

      Delete
  3. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...