Sunday 3 January 2016

த்தூ நீ எல்லாம் ஒரு ராணுவ வீரனா

கல்லூரி ஒன்றில் வேலை பார்த்த போது நேர்ந்த சம்பவம் இது.முதலில் இந்த சம்பவம் நிகழ காரணகர்த்தாவாக இருந்த அந்த புண்ணியவான் பற்றி ஒரு முன்னுரை. (இவரை, எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் என்று அழைப்போம்)

செவ்வாயில மனிதர்களை குடி வைக்க போறாங்களாம், என நாம் பேசி கொண்டிருந்தால்...

சார், செவ்வாய் குடி போறது நல்லது இல்லை, பொன் கிடைச்சாலும் புதன் கிடைக்காது புதன் கிழமை குடி போக சொல்லுங்க சார் என்பார் நம்ம "ஏகாம்பரம்" சார்.

இவ்வளவு "விவரம்" தெரிந்தவாரக இருப்பதாலோ என்னவோ சுதந்திர தின நாளில் கொடி ஏற்றும் நிகழ்வினை நடத்தும் பொறுப்பு "ஏகா"விடம் கொடுக்கப்பட்டது. 

ஒரு வாரம் நம்ம ஏகா சாரும் தூங்கவில்லை, மாணவர்களையும் தூங்க விடாமல், வைரமுத்து ரேஞ்சுக்கு ஏகப்பட்ட நோட்டுக்களை "இளைக்க" வைத்து எதோ நோட்டு எழுதி கொண்டு இருந்தார். 

அந்த ஏட்டை எங்கு சென்றாலும் எடுத்து கொண்டே போவார், அதனால் அதில் என்ன எழுதுகிறார் என்பது சிதம்பர ரகசியமாக இருந்தது.

கேட்டால் ஒரு மர்ம புன்னகை மட்டுமே பதிலாக வரும். சுதந்திர தினம் நெருங்க...நெருங்க...அனைவருக்கும் பி.பி, சுகர் லெவல் எகிற ஆரம்பித்து விட்டது.


விடிந்தது...ஆகஸ்ட் 15ம் வந்தது.

அனைவரும் கொடி கம்பம் அருகில் (ஒரு நாள்) தேச பக்தியுடன் ஆஜர்.


டாக்...டாக்ன்னு ஷூ சத்தம் ஒலிக்க.... அனைவரும் திரும்பி பார்க்க,நம்ம ஹீரோ விரைப்புடன் நடந்து வந்து கொண்டிருந்தார். 

கல்லூரியின் முதல்வரும் பெருமிதத்துடன் ஏகாவின் "ஏற்பாடுகளை" கவனித்த படியே கொடி ஏற்ற தயார். 

பவ்யமாக ஏகா சார் கயிற்றினை எடுத்து கொடுக்க கொடி ஏற்றப்பட்டது. ஆனால் கொடி விரியவில்லை. சில பல சித்து வேலைகள் செய்து கொடி ("தலை கீழாக") விரிக்கப்பட்டது.

அதை பற்றிய உணர்வின்றி நம்ம ஏகா சார் பொக்கிஷமாய் பாது காத்து வந்த "அந்த நோட்டை" விரித்து வைத்து கொண்டு "நேஷனல் ஆனந்தம்" என கழுத்து நரம்பு புடைக்க கத்த சக ஆசிரியரின் மகனின் "டவுசர் ஈரம் ஆகிவிட்டது" 

இது என்னடா புது ஆனந்தம் என அனைவரும் திகைக்க, நம்ம ஹீரோ சார் "நீராரும் கடலுத்த" என தப்பும் தவறுமாக "பாட" ஆரம்பிக்க அனைவருக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை.  

கொசுறு தகவல்:ஏகா சார் "முன்னாள் ராணுவ வீரர்".


4 comments:

  1. என்ன நண்பரே இங்கேயும் ''தூ'' வா ?

    ReplyDelete
  2. இப்போ இதுதானே டிரென்ட் ஜி.

    ReplyDelete
  3. ஹா... ஹா... ஏகா சார் ரொம்ப நல்ல சார் போங்க...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான், ஏகாவை வைத்துதான் விடுமுறை பொழுதுகள் கழிந்தன.

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...